பாரிய குற்றங்களுடன் தொடர்புடைய இருவர் பொலிஸ் அதிரடிப் படையால் கைது

234 0

பாரிய குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இரண்டு பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

தொட்டலங்க பிரதேசத்தில் வைத்து இன்று காலை பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போதைப் பொருள் கடத்தல் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுடும் குழுவுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுடைய இரண்டு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ திட்டமிட்ட குற்றச் செயல் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Leave a comment