வயல்வௌியில் இருந்து உயிரிழந்த யானையின் உடல் கண்டெடுப்பு

236 0

வெலிகந்த, அசேலபுர, மஹிந்தாகம பிரதேசத்தில் உள்ள வயல்வௌியில் இருந்து உயிரிழந்த யானையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் அதிகாரிகள் விசாரணை நடவடிக்கைக்காக அந்த இடத்திற்கு வருகை தந்தவுடன் அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக  செய்தியாளர் கூறினார்.

உயிரிழந்த யானையின் உடல் இருப்பதை கண்ட வயல் உரிமையாளரான பெண் வெலிக்கந்த வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அதேநேரம் அந்த இடத்திற்கு பொலிஸாரும் வருகை தந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சம்பவ இடத்திற்கு வனஜீவராசிகள் அதிகாரிகள் வந்தவுடன், வயல் உரிமையாளரான பெண்ணை கைது செய்வதற்காக வந்திருப்பதாக குற்றம் சுமத்தியதையடுத்து அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a comment