சிலாபம் பகுதியில் ஏற்பட்ட விபத்துக்களில் ஒருவர் பலி

386 0

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பிரதேசங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று மாலை (18) சிலாபம் – கொழும்பு பிரதான வீதியில் காக்கப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வீதிக்கு வந்த பந்தை எடுப்பதற்காக முயற்சித்த பெண் ஒருவர் கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த பேருந்தில் மோதி படுகாயங்களுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்து ஓட்டுனர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் நேற்று (18) இரவு மஹகம, கம்மல் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எட்வட் அன்டனி பிரனாந்து எனும் 47 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு விபத்துக்கள் தொடர்பிலும் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment