பாராளுமன்ற கட்டடத் தொகுதியானது 35 வருடங்களக்குப் பின்னர் 100 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு செலவாகும் பணத்தை கோரும் அமைச்சரவை பத்திரமானது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற பொதுசெயலாளர் தம்மிக திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் கூரை, வாயிற் கதவுகள், மலசல கூடம்,பாராளுமன்ற சபை , பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் என்பன புனரமைப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.