25ம் திகதி வரை விஷேட பஸ் சேவை தொடரும் – இ.போ.ச

247 0

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட விஷேட பஸ் போக்குவரத்து சேவை இம்மாதம் 25ம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச் சபை கூறியுள்ளது.

மாகாண மற்றும் பிரதேச மட்டங்களில் மக்களுக்கு வெற்றிகரமாக போக்குவரத்து வசதிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக அந்த சபையின் போக்குவரத்து பிரதிப் பொது முகாமையாளர் சந்திறசிறி தெரிவித்தார்.

இதன்மூலம் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்வதற்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

Leave a comment