கனடாவில் ஈழத் தமிழர் ஒருவர் கொடூரமாகக் கொலை!

18503 0

சிறிலங்கா அரச புலனாய்வாளர்களினால் கொலை முயற்சியில் இருந்து தப்பி எம்.வி.சன்சி கப்பலில் கனடா வந்திருந்த ஈழத் தமிழர் கிருஷ்ணகுமார் கனகரத்தினம் (அகவை 37 ) கொடூரமாக கொலைசெய்யப்பட்டுள்ளார்.

கொலையாளியின் கணினியில் இருந்து மீட்கப்பட்ட புகைப்படங்களில் இருந்தே கடாகுமார் என்று நண்பர்களால் அழைக்கப்படும் கிருஸ்ணகுமார் கனகரத்தினம் அவர்கள் கொலைசெய்யப்பட்டுள்ளார் என்று கனடிய பொலிசார் உறுதிசெய்துள்ளனர்.

தமிழீழத்திலிருந்து சிறிலங்கா அரசபடைகளால் அவரது தம்பி கொல்லப்பட்டபின் தன் உயிரைக் காத்துக்கொள்ள அடைக்கலம் தேடிக் கனடா வந்த கிருஷ்ணகுமாரின் அகதிநிலைக் கோரிக்கை மறுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார்.

Leave a comment