தமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நாளை இரவு நடைபெறவுள்ள கூட்டத்தில் தீர்மானிக்கப்படுமென, அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களின் அணி தெரிவித்துள்ளது.
எனவே அதுவரை தமது அணியினர் ஊடகங்கள் முன்பாக அமைதியாக இருப்பதாக லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் எஸ்.பி.திசாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர்.