மஹிந்தானந்த அழுத்தகமகே பிணையில் விடுதலை

190 0

இன்று காலை பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அழுத்தகமகேயிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் 53 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மட்டும் சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment