முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்ட விச ஊசிப் பரிசோதனை

329 0

800x480_image52983553-1முன்னாள் போராளிகள் 26பேருக்கு முதற்கட்டமாக விச ஊசிப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்தச் சிறப்பு மருத்துவப் பரிசோதனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா மாவட்டத்தில் 3 முன்னாள் போராளிகளும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் மாவட்டத்திலிருந்து எந்தவொரு போராளிகளும் மருத்துவப் பரிசோதனையில் ஈடுபடவில்லை.

அதேவேளை முன்னாள் போராளிகளுக்கான இரண்டாம் கட்ட பரிசோதனை கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா பொது மருத்துவமனைகளிலும், யாழ். போதனா மருத்துவமனையிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.