அரசாங்கம் சக்திமிக்கதாயின் நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்தவும்!

266 0

அரசாங்கம் சக்திமிக்கதாயின் நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலை நடத்துமாறு, நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார் . தங்காலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த சவாலை விடுத்துள்ளார்.

அரசாங்கம் உறுதியானதாயின் மக்களை சந்திக்க அரசாங்கம் தயாராக இருப்பதாயின், பொது தேர்தலை நடத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார். தமக்கு இந்த வருடம் சிறந்த வருடமாக அமைந்தது. அரசாங்கத்தை இரண்டாக்குதல், ஐக்கிய தேசிய கட்சியை பிளவுப்படுத்தல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய பயணத்தை ஆரம்பித்தல் போன்ற காரியங்கள் கைகூடியதாகவும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

Leave a comment