24 மணி நேர பொலிஸ் சோதனையில் 10247 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

304 0

நாட்டின் பல பாகங்களிலும் பொலிஸார் மேற்கொண்ட திடீர் வீதிச் சோதனை நடவடிக்கையின்  போது  10147 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் 233 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் அதிகமானவை மது போதையில் வாகனம் செலுத்தியதனால் ஏற்பட்டவை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Leave a comment