நுகர்வோர் அதிகார சபை வாடிக்கையாளர்களிடம் வேண்டுகோள்

227 0

பொருட் கொள்வனவில் வாடிக்கையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சமந்தா கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக குறைந்த விலையிலான துணி வகைகள், மின்சார உபகரணங்கள் போன்றவற்றை கொள்வனவு செய்கையிலும், விசேட விலைக் கழிவுகளை பெறுகையிலும் அவதானம் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வாறான மோசடி சம்பவங்கள் இடம்பெற்றால் 0117 755 481 என்ற தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment