யாழிற்கு படையெடுக்கும் தென்னிந்திய பிரபலங்கள். எதற்காக?

188 0

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்துக்கு தென்னிந்திய நடிகர்களின் விஜயம் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதலில் ஆர்யா ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அதன் பின்னர் கணேஷ் வெங்கட் மற்றும் அவரது மனைவி நிஷாவுடன் ஒரு திருமண நிகழ்வுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

தற்போது அந்த வரிசையில் சினேகனும் வையாபுரியும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கின்றார்கள். தனிப்பட்ட தேவை ஒன்றிற்காக வந்திருப்பதாக தெரிய வந்திருக்கின்றது.

சினேகன் ஒரு மிகச் சிறந்த பாடல் ஆசிரியர் என்பதுடன் வையாபுரி பல முன்னணி நடிகர்களுடன் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆகும்.

மேலும், இவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றி மிகவும் பிரபலமாகிவிட்டனர்.

அண்மைக்காலமாக பிரபலங்களின் திடீர் அடுத்தடுத்த விஜயங்கள் அனைவரையும் வியப்பிலாழ்த்தியுள்ளது.

Leave a comment