சகீப் சுலை­மானின் படு­கொலை சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை திரட்டும் பணி

331 0

businessman_-mohamed-sakeem-sulaiman-pics-e1472203539958பம்­ப­ல­ப்பிட்டி – கொத்­த­லா­வல அவ­னியூ பகு­தியில் வைத்து கடத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்பட்ட பிர­பல கோடீஸ்­வர வர்த்­தகர் மொஹம்மட் சகீப் சுலை­மானின் படு­கொலை சந்­தேக நபர்­க­ளுக்கு எதி­ரான சாட்­சி­யங்­களை திரட்டும் பணிகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி கடத்தல் மற்றும் படு­கொ­லைக்கு சதித் திட்டம் தீட்­டி­ய­தாக சந்­தே­கிக்­கப்­படும் தற்­போது விளக்­க­ம­றி­யலில் உள்ள 8 நபர்­களும் பயன்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் 13 தொலை பேசி இலக்­கங்கள் குறித்து கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­வினர் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளனர்.

அத­னை­விட ஐந்து தொலை பேசிகள் குறித்தும் தற்சமயம் விசா­ர­ணைகள் இடம் பெற்­று­வ­ரு­வ­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

இந் நிலையில் குறித்த தொலை­பேசி இலக்­கங்கள் 13 மற்றும் 5 தொலை­பே­சிகள் தொடர்­பி­லான தக­வல்­களை பெற்­றுக்­கொள்ள குற்றத் தடுப்புப் பிரி­வினர் 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்­ற­வியல் சட்­டத்தின் 67 ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் ஊடாக உத்­த­ர­வினைப் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

அதன்­படி பொலி­ஸா­ரினால் கண்­ட­றி­யப்­பட்­டுள்ள 13 தொலை­பேசி இலக்­கங்கள் மற்றும் 5 தொலை­பே­சி­களின் எமி இலக்­கங்­களை மையப்­ப­டுத்தி பூரண அறிக்கை ஒன்­றினை கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி, நீதி­வா­னுக்கு வழங்க டயலொக், மொபிடல், எட்­டி­சலாட், ஹச் மற்றும் எயார்டெல் ஆகிய தொலை­பேசி சேவை நிறு­வ­னங்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

இதனை விட கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் டப்­ளியூ.பி. சி.ஏ.எல். 3159 எனும் இலக்­கத்தை உடைய காரை இர­சா­யன பகுப்­பாய்­வுக்கும், ஜீன் டெக் நிறு­வ­னத்தின் ஆய்­வுக்கும் உட்­ப­டுத்த பொலிஸார் தீர்­மா­னித்­துள்­ளனர்.
ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் இதற்­கான அனு­ம­தி­யி­னையும் பொலிஸார் பெற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

காரினை இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு உட்­ப­டுத்தி அதன் ஊடா­கவும் தட­யங்­களை சேக­ரிக்க பொலிஸார் இத­னூ­டாக அனு­மதி பெற்­றுள்­ளனர்.

இத­னை­விட கடத்தல் சம்­பவம் இடம்­பெற்ற இடத்தில் இருந்து பொலி­ஸாரால் அடை­யாளம் காணப்­பட்ட இரத்தக் கறை தொடர்பில் மர­பணு பரி­சோ­தனை (டி.என்.ஏ) மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் அதனை முன்­னெ­டுத்த ஜீன் டெக் நிறு­வ­னத்தின் ஆய்­வுக்கு கடத்­த­லுக்கு பயன்­ப­டுத்­தப்பட்ட காரினை உட்­ப­டுத்த பொலிஸார் தீர்­மா­னித்­துள்­ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி கடத்­தப்பட்ட கோடீஸ்­வர வர்த்­தகர் சகீப் சுலைமான் 24 ஆம் திகதி மாவ னல்லை பகுதியில் வைத்து சடலமாக மீட் கப்பட்டார்.

இதுவரையில் அவரிடம் மிக நெருங்கிய நம்பிக்கைக்குரியவாரக கடமை யாற்றிய ஊழியர் ஒருவர் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.