கைவிடப்பட்ட காரிலிருந்து ஹெரோய்ன் போதைப்பொருள்

214 0

தெற்கு அதிவேக வீதியின் கடுவலை நுழைவாயில் ஊடாக பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற காரிலிருந்து ஒருதொகை ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த கார் கைவிடப்பட்டிருந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த காரினை சோதனையிட்ட பொலிஸார், 56 கிராமும் 100 மில்லிகிராமும் நிறையுடைய ஹெரோய்ன் பொதியை கைப்பற்றியுள்ளனர்.

கார் தற்போது அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, காரின் உரிமையாளரை கண்டறியும் பொருட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment