காமன்வெல்த் 2018 – இந்தியாவுக்கு 12-வது தங்கப்பதக்கம் பெற்று தந்தார் ஷ்ரேயாசி சிங்

326 0

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி சிங் தங்கப்பதக்கம் வென்றார். 

காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இந்தியா 11 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், இன்று பெண்களுக்கான டபுள் டிராப் துப்பாக்கிச்சுடுதல் போட்டிகள் நடந்தது.
இதில் இந்திய வீராங்கனை ஷ்ரேயாசி சிங் 96+2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். இப்போட்டியில் வெள்ளிப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை எம்மா கோக்ஸ்சும், வெண்கலப்பதக்கத்தை ஸ்காட்லாந்து வீராங்கனை லிண்டா பியர்சன்னும் தட்டிச் சென்றனர். மற்றொரு இந்திய வீராங்கனையான வர்ஷா வர்மன் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெண்கலப்பதக்கத்தை தவறவிட்டார். இந்தியா 12 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்கள் பெற்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது.

Leave a comment