முல்லைத்தீவு கொக்கிளாயில் தனியார் காணியொன்றில் விகாரை அமைக்கும் பணிகளை வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர்.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா இரவிகரன் கடந்த மாகாண சபை அமர்வில் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இன்று காலை முல்லைத்தீவுக்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பல்வேறு இடங்களுக்கும் சென்று பார்வையிட்டனர்.
இதற்கமைய முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் தனியார் காணியில் அத்துமீறி விகாரை அமைக்கும் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு சென்று, அங்கு இடம்பெறும் பணிகள் குறித்து காணி உரிமையாளருடன் கேட்டறிந்தனர்.
இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் து.இரவிகரன் அப்பகுதியிலுள்ள நிலைமைகள் தொடர்பில் ஏனைய உறுப்பினர்களுக்கு விளக்கியதோடு, ஒருதொகுதி உறுப்பினர்கள் விகாரையின் விகாராதிபதியுடனும் கலந்துரையாடினர்.