மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் (காணொளி)

293 0

தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவாக, எதிர்வரும் 18 ஆம் திகதி நடாத்தப்படவுள்ள உதைப்பாந்தாட்ட இறுதிச் சுற்றுப் போட்டி மற்றும் 19 ஆம் திகதி அன்னையின் நினைவாக மேற்கொள்ளப்படவுள்ள ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பில் இன்று நடைபெற்றது.

தேசத்தின் வேர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

இதன் போது, தேசத்தின் வேர்கள் அமைப்பின் இயக்குனர் கே.பிரபாகரன், சிரேஷ்ட ஆலோசகர் பி.சின்னத்துரை மற்றும் உறுப்பினர்கள் இணைந்துகொண்டனர்.

Leave a comment