முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல்-மட்டக்களப்பில் கண்காட்சி (படங்கள் இணைப்பு)

451 0

03புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையில், முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான கண்காட்சி இன்று நடைபெற்றது.
புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற குறித்த கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர்வாளர்களின் வாழ்வையும், பிரயாசைகளையும், அடைவுகளையும் கொண்டாடும் முகமாக புகைப்படங்கள், சித்திரங்கள், கதைகள், குறும்படங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டன.

05 04
02
புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின் மட்டக்களப்பு கிளையில் நடாத்தப்பட்ட இக்கண்காட்சிக்கு, புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் கிழக்கு மாகாணத்திற்கான பொறுப்பதிகாரி எம்.ஜெயராஜன் தலைமை தாங்கினார்.
இக்கண்காட்சியில் முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் காலி மாவட்ட பாடசாலைகள் மட்டத்தில் நடாத்தப்பட்ட ஓவிய போட்டிகளில், தெரிவு செய்யப்பட ஓவியங்களும், புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.