ஹெரோய்னுடன் நீதிமன்றத்துக்கு வந்த பெண் கைது

215 0

கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு ​ஹெரோய்னுடன் வருகை தந்த பெண் ஒருவர், இன்றைய தினம் (02) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராஜகிரிய பிர​தேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய குறித்த பெண், தனது தந்தையின் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றத்துக்கு வருகை தந்திருந்த வேளையில், 4 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருளையும் கொண்டுவந்ததுக்கு அமைய, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a comment