சாதாரண தர பரீட்சையில் மீலாத் பாடசாலை நூறு வீத சித்தி

258 0

2017ம் ஆண்டு க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தெஹிவளை மீலாத் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் நூறு வீத சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் குறித்த பாடசாலையிற் சேர்ந்த ஆர்.எம். முஷரப் என்ற மாணவர் முதற்தடவையாக 9A சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

குறித்த பெறுபேறுகள் மூலம் அனைத்து மாணவர்களும் உயர் தர கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பை பெற்றிருப்பது வரலாற்று சாதனையாகும் என பலரும் பாராட்டியுள்ளனர்.

இந்த சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்காக உழைத்த பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.சுஹார் உற்பட பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் பெற்றோர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.(

Leave a comment