ஏழை மக்களை மதியாத அரசு சரியும்- கமல் டுவிட்டரில் ஆதங்கம்

230 0

ஏழை மக்களை மதியாத அரசு சரியும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் கூறியுள்ளார். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்திற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று நேரில் சென்று ஆதரவை தெரிவித்தார்.
இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
அன்பு வீசும் அந்த குமாரரெட்டிபுர வேப்பமரத்தடியில் சற்று நேரம் அமர்ந்து பார்த்தால் மக்கள் பற்றிய ஞானம் வரும். தாய்யுள்ளங்களின் ஓலம் கேட்டேன். ஏழை மக்களை மதியாத அரசு சரியும். மக்களே மய்யம் வாய்மையே வெல்லும்.இவ்வாறு கூறியுள்ளார்.

Leave a comment