காவிரி மேலாண்மை வாரியம் – திருவாரூரில் 6-ந்தேதி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: பிரேமலதா பங்கேற்பு

35588 0

காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக திருவாரூரில் 6-ந்தேதி தே.மு.தி.க. நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பங்கேற்கிறார்.

தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அதை நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத மாநில அரசை கண்டித்தும் வருகின்ற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணியளவில், திருவாரூர் மாவட்டம், திருவாரூர் நகரம், கீழ வீதியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் தலைமை கழக நிர்வாகிகளும், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய பெருமக்கள் என அனைத்து தரப்பினரும் பெருந்திரளாக கலந்து கொண்டு, இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்றேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment