கர்நாடகாவில் 24 நாட்கள் சுற்றுபயணம் செய்ய ராகுல் காந்தி திட்டம்!

246 0

கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றிபெற செய்ய அங்கு 24 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 20 பொது கூட்டங்களில் பேச ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார். 

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12-ம் தேதி நடக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே கடும் போட்டி நிலவுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இத்தேர்தல் கருதப்படுவதால் இரு கட்சிகளும் தங்களது செல்வாக்கை உயர்த்த திட்டமிட்டு வருகின்றன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்களை சந்தித்தார். கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. முனைப்பு காட்டி வருகிறது. தற்போது பா.ஜ.க. தலைவர் அமித்ஷா அங்கு பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், கர்நாடகாவில் 24 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ய ராகுல் திட்டமிட்டுள்ளதாவும், அப்போது 20 பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக விரைவில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

Leave a comment