சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாள்!

286 0

நடமாடும் கடவுள் என்று கர்நாடக மக்களால் அழைக்கப்படும் சிவக்குமார சுவாமி 111-வது பிறந்த நாள் விழாவிற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கர்நாடக மாநிலம் துமகூருவில் சித்தகங்கா என்னும் மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் சிவக்குமார சுவாமி. நடமாடும் கடவுள் என்று கர்நாடக மக்களால் அழைக்கப்படும் அவர் நேற்று தனது 111-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

அவருக்கு பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா உள்பட பலர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். ஏராளமான மடாதிபதிகளும், லட்சக்கணக்கான பக்தர்களும் சிவக்குமார சுவாமியிடம் ஆசி பெற்றனர்.

மடத்தில் மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. பிறந்த நாளையொட்டி துமகூரு சித்தகங்கா மடத்தில் சிவக்குமார சுவாமிக்கு குருவந்தனா நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி 111 தீபங்கள் ஏற்றப்பட்டன. இதில் மைசூரு சுத்தூர் வீரசிம்மாசன மகா சமஸ்தான மடத்தின் மடாதிபதி சிவராத்திரி தேசிகேந்திர சுவாமி கலந்து கொண்டார்.

Leave a comment