நிதி அமைச்சர் – வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு

225 0

நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பற்றுள்ளது.

இச்சந்திப்பில் முன்னாள் போராளிகளின் மீள்குடியமர்வு, அவர்களுக்கான இலகு கடன்கள், வாழ்வாதார உதவித் திட்டங்களை வடக்கு மாகாண சபையுடன் இணைந்து அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் 2018 வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களை வடக்கில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும், வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 1000 மில்லியன் ரூபாவை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் எனவும் இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, நிதியமைச்சின் அதிகாரிகள், மத்திய வங்கி அதிகாரிகள், வடக்கு மாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Leave a comment