தந்தை செல்வாவின் பிறந்த தினம் யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தந்தை செல்வாவின் சிலைக்கு மாவை சேனாதிராஜா மாலை அணிவித்து வணக்கம் செலுத்தினார்.
நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம்,யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் இ.ஆனோல்ட்,வடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி,கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

