போலி பேஸ்புக் கணக்கு – நியுசிலாந்து பிரஜை கைது

379 0

201606301148470050_fake-account-college-girl-name-cyber-crime-starts-probe_secvpfகாவல்மா அதிபர் என்ற போலி பேஸ்புக் கணக்கினை உருவாக்கி பெண்களை ஏமாற்றி வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்ற விசாரணை பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நியூசிலாந்தின் வசிக்கும் அவர் கடந்த 5ஆம் திகதி வானூர்தி ஊடாக இலங்கை வந்த போது கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

அவர் நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்ட போது, நாளை வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணெருவரினால் இந்த போலி பேஸ்புக் கணக்கு தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதுதொடர்பில் குற்ற புலனாய்வு பிரிவினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.