தாஜூதீன் கொலை – சந்தேகத்திற்குரியவர்களின் விளக்கமறியல் நீடிப்பு

376 0

waseem-thajudeen-640x400-720x480றகர் வீரர் வஸிம் தாஜூதீனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சிரேஸ்ட பிரதி காவல்மா அதிபர் அனுர சேனாநாயக்கவின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொலை தொடர்பான வழக்கு விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.

இதனிடையே, இந்த கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாரஹேன்பிட்டி காவல்நிலைய புலனாய்வு பிரிவின் முன்னாள் நிலைய பொருப்பதிகாரி சுமித் ஷம்பிக்கவின் விளக்கமறியல் காலமும் 21ஆம்  திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பான சாட்சியங்களை மறைத்தமை தொடர்பில் இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.