தாக்குதல் சம்பவத்திற்கு மஸ்கெலியா பொலிஸார் உடந்தை- கணபதி கனகராஜ்

224 0

மஸ்கெலியா பிரதேச்சபையின் தலைவர் மற்றும் உபதலைவர் தெரிவு செய்யபட்டமை தொடர்பில் கடந்த  புதன் கிழமை அன்று இடம் பெற்ற  தாக்குதல் சம்பவமானது பொலிஸாரின் ஆதரவுடனேயே  இடம் பெற்றதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் குற்றம் சுமத்தியுள்ளார் .

மஸ்கெலியா பிரதேச சபைக்கான வாக்கெடுப்பின் போது  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் மறைத்து வைக்கபட்டதாக தெரிவிக்கபடும் குற்றச்சாற்று தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையின் போதே கனகராஜ்  மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட  கனகராஜ்,

பொலிஸார் என்பவர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியவர்கள் ஆனால் 28 ஆம் திகதி மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தின் முன்பாகவே  இ.தொ.கா.மீது கல்வீச்சு மேற்கொள்ளபட்டது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது நேற்று பெய்த மலையில் முளைத்த காலான் அல்ல ஆசியாவிலே மிக பெரிய  தொழிற்சங்கமாக இருந்த இ.தொ.கா.வுக்கு நபர்களை கடத்தியோ அல்லது மறைத்து வைத்தோ அரசியல் செய்யவேண்டி அவசியம் கிடையாது.

குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் தனக்கு சுகயீனம் காரனமாகவே நான் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லையென தெரிவித்துள்ளார் .

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் எங்களது கட்சி அமோக வெற்றி பெற்று பெரும்பான்மையான பிரதேச்சபையின் தலைவர் பதவிகளை தக்கவைத்து கொண்டு வருகிறது.

இ.தொ.கா.வின் வெற்றியை தாங்கி கொள்ள முடியாதவர்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொய்யான முறைபாட்டினை பதிவு செய்கின்றனர் இ.தொ.கா,  ஐ.தே.க.யின் உறுப்பினரை கடத்திவிட்டதாக….

மலையகத்தில் மாற்றத்தை நாங்கள் தான் கொண்டுவந்தோம் என மார்பு தட்டி கொண்டிருந்தவர்களை இன்று மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் இந்த தோல்வியை பொறுத்து கொள்ளமுடியாதவர்கள் எங்கள் மீது சேறு பூச முயற்சித்து வருகின்றனர்.

மஸ்கெலியாவில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் மஸ்கெலியா பொலிஸாரின் ஆதரவுடன் இ.தொ.கா.வினர் மீது தக்குதல் நடத்தியுள்ளமையானது வன்மையாக கண்டிக்கதக்க செயல்” எனவும் குறிப்பிட்டார்

Leave a comment