ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாம் ஒரு கட்சியாக இருந்து முகம்கொடுக்கவுள்ளதாகவும், ஏப்றல் மாதத்துக்குள் யாரும் எதிர்பாராதளவு மாற்றமொன்றை கட்சிக்குள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஐ.தே.க.யின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
இன்று (29) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்க கட்சி தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

