பெரும் பதற்றத்துக்கு மத்தியில் மஸ்கெலியா பிரதேசசபை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வசம்

221 0

மஸ்கெலியா பிரதேச சபையின் தலைவியாக இலங்கை தொழிலாளர் காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெண் வேட்பாளரான கற்பகவள்ளி தெரிவு செய்யப்பட்டுள்ளதோடு உதவி தலைவராக பெரியசாமி பிரதீபன் நியமிக்கப்பட்டுள்ளார் .

மஸ்கெலிய பிரதேச சபைக்கான தலைவர் தெரிவு நடவடிக்கையின் போது அங்கு பதற்றமான நிலை தோன்றியிருந்தது.

அந்த சபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவர் சபைக்கு வருகை தரவில்லை என்பதுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் அவரை மறைத்து வைத்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியதை தொடர்ந்து அங்கு குழப்பநிலை ஏற்பட்டது. ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து தனது எதிர்ப்பினை வெளிக்காட்டினர். இதனை தொடர்ந்து சபை தலைவர் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது

இந்த வாக்கெடுப்பில் இலங்கை தொழழிலாளர் காங்கிரஸ்ஸின் உறுப்பினர் கற்பகவள்ளி தலைவராகவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் உபதலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

அதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டதனையடுத்து இருசாராருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் அது கல்வீச்சாக மாறியது. இக்கல்வீச்சில் சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளானதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கல்வீச்சி காரணமாக பொது போக்குவரத்து தடைபட்டதுடன் வாகன நெரிசல் நிலையும் ஏற்படடன. இதனை தொடர்ந்து ஏனைய பொலிஸ் நிலையங்களிலலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

இந்த கல்வீச்சு சம்பவங்களுடன் இரு கட்சிகளினதும் அரசியல் பிரதிநிதிகளும் ஈடுபட்டதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றன. இது குறித்து மஸகெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment