சென்னை அருகே பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் அன்பழகனை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை அருகே பூந்தமல்லியில் காவலர் அன்பழகன் என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்துள்ளார். அந்த வழியே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்துள்ளது. அதில் 3 பேர் பயணம் செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்களை காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் காவலரை அரிவாளால் வெட்டியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பன்னீர்செல்வம், சுதீஷ்குமார் மற்றும் ரஞ்சித் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்கள் 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.