மாகம்புர துறைமுக ஊழியர்களுக்கு நிரந்தர தொழில்

213 0

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 135 ஊழியர்களுக்கு துறைமுக அதிகாரசபையில் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏனைய ஊழியர்களுக்கு 13 இலட்சம் நஷ்டஈடு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம் மீளமைக்கப்படும் போது வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் தொழிற்சங்கங்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்பாடு மீது 135 ஊழியர்களுக்கு துறைமுக அதிகாரசபையில் நிரந்தர நியமனம் பெற்றுக்கொடுப்பதற்கு ஏனைய ஊழியர்களுக்கு 13 இலட்சம் நட்டஈடும் வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக குறித்த நியமனங்களை வழங்கும் நிகழ்வின் போது துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ குறிப்பிட்டார்.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் மஹபொல துறைமுகம் மற்றும் கடல்சார் கல்லூரியில் நடைபெற்ற குறித்த நியமனம் வழங்கும் நிகழ்வின் போது மீன்பிடி மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் தலைவர் கலாநிதி பராக்ரம திசாநாயக்க உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment