மயிலிட்டித் துறைமுகம் விரைவில் மக்கள் பாவனைக்கு வழங்கப்படும் – மகேஸ் சேனநாயக்க

361 0

மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் விரைவில் மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் என யாழ்மாவட்டக் கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலயார் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அன்று பரம்பரை மீனவர்கள் மாத்திரமே அங்கு படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர் , தற்போது இளைஞர்களும் அங்கே படகுகளை நிறுத்தி மீன்பிடிப்பதற்கு விரும்புகின்றனர்.

எனினும் மீன்கள் குவியும் இடத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க முயற்சிப்பதில்லை, இதனால் தான் மயிலிட்டியை அண்மித்த பகுதிகளில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் அதிகமாக காணப்படுகின்றது.

எனவே, படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் விரைவாக மக்களிடம் கையளிக்கப்படும் என மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.