03 கிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

258 0

ஹெரோய்ன் போதைப் பொருளை வைத்திருந்த சம்பவத்தில் குற்றவாளியான நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள்கால சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வைத்து மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகளால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட போது சந்தேகநபரிடம் 03.52 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதன்படி சந்தேகநபருக்கு எதிரான நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் ஆயுள்கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

62 வயதுடைய மொஹமட் ஹபீஸ் எனும் நபருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a comment