ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட வாய்தர்த்தில் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே இந்த தீர்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு கருத்துக்களை முன்வைத்திருந்த போதும் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொறு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.