கொழும்பு ஆமர்வீதியின் மெசஞ்சர் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை 10.55 அளவில் குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் சம்பவத்தில் காயத்திற்குள்ளான நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்தது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இரு நபர்கள் கார் வண்டி ஒன்றின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் கார் வண்டியில் பயணித்த ஒருவரே காயத்திற்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.