கனடா நாடு கடத்தவுள்ள பெண்!

207 0

கனடாவில் பெண் ஒருவர் நாடுகடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஹர்கேரி நகரை சேர்ந்த, ஹென்சா பிளாக்ஷிஸ் என்னும் பெண், தனது ஆண் நண்பரான நஸிரிக்கு வங்கி ஒன்றை கொள்ளையடிப்பதற்கான வரை படத்தை கொடுத்துள்ளார். இதனடிப்படையில் அவரது ஆண் நண்பர் மற்றும் இருவர் சேர்ந்து வங்கியில் கொள்ளையடித்துள்ளனர்.

இருந்தபோதும் உடனடியாக அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் நடந்த விசாரணையில் ஹென்சாவை கைது செய்து விசாரித்துள்ளனர். ஹென்சாவும் உண்மையை ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மொராக்கோ நாட்டை சேர்ந்த ஹென்சா நடைபெறவுள்ள வழக்கில், 6 மாதங்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டால், கனடா நாட்டு குடியுரிமை வழங்கப்படாமல், சொந்த நாட்டிற்கு கடத்தப்படவுள்ளார். இதனடிப்படையில் ஹென்சாவுக்கு 6 மாத சிறை தண்டனை கிடைத்தால், கனடாவில் குடியுரிமை கிடைத்துள்ள தனது குடும்பத்தை விட்டு நாடு கடத்தப்படவுள்ளார்.

Leave a comment