யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயரின் ஆளுகையின் கீழ் இயங்கும் புனித பத்திரிசியார் கல்லூரியின் தொழில்நுட்ப ஆய்வுகூட கட்டடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை திறந்து வைக்கப்படுகிறது.
புலம்பெயர்ந்து வாழும் புனித பத்திரிசியார் கல்லூரியின் பழைய மாணவர்களின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியில் இக்கட்டடம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காலை 9.30 மணிக்கு திறந்துவைக்கப்படுகிறது.
யாழ்.மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜஸ் ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் ஜனாதிபதியுடன் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவாசம், கிறிஸ்தவ விவகார அமைச் சர் ஜோன் அமரதுங்க, வடக்கு மாகாண ஆளுநர் றெஜிநோல்ட் கூரே, மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.
29 ஆண்டுகளாக புனித பத்திரிசியார் கல்லூரியில் பணியாற்றி, அதில் 10 ஆண்டுகளாக – அதிபராக பணியாற்றிய அருட்தந்தை எம்.ஜெறோ செல்வநாயகம் அடிகளார் அண்மையில் பணிஓய்வு பெற்றதையடுத்து எ.பி. திருமகன் அடிகளார் புனித பத்திரிசியார் கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஏற்றிருந்தார்.
யாழ்.மறைமாவட்டத்தில் பல கல்விமான்களையும், ஆயர்களையும் குருக்க ளையும் உருவாக்கிய இக்கல்லூரிக்கு புலம் பெயர்ந்து வாழும் பழைய மாணவர் களின் நிதியுதவியுடன் புதிய விஞ்ஞான தொழில் நுட்ப ஆய்வுகூடம் அமையப் பெறுவது வரப்பிரசாதமாகும் என்று கல்லூரி அதிபர் திருமகன் அடிகளார் தெரிவித்தமை குறிப் பிடத்தக்கது.