இன்னும் 6 மாதங்களில் தி.மு.க. ஆட்சிக்கு வரும்- நடிகர் ராதாரவி பேச்சு

220 0

இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று இளைஞர் எழுச்சி நாள் பொதுகூட்டத்தில் நடிகர் ராதாரவி பேசினார்.

சூளகிரி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் இளைஞர் எழுச்சி நாள் பொதுகூட்டம் பேரிகை பஸ் நிலையத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் நடிகரும், தி.மு.க. தலைமை கழக பேச்சாளருமான ராதா ரவி கலந்துகொண்டு பேசும் போது இன்னும் 6 மாதங்களில் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்றும் அதன் பிறகு மு.க. ஸ்டாலின் தான் தொடர்ந்து தமிழகத்தை ஆள்வார் என்றும் கூறினார்.

கூட்டத்துக்கு வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ் தலைமை தாங்கினார். முனிகிருஷ்ணன் வரவேற்றார் ராமசந்திரன், ராஜேந்திரன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ. மாவட்ட துனை செயலாளர் முருகன் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட நிர்வாகிகள் யுவராஜ். தனலட்சுமி, சீனிவாசன், ஜெயராமன், பாக்கியராஜ், ஷேக் ரஷீது, சாலம்மாள் அப்பையா மற்றும் மாதேஷ் வரன் சுகுமாரன், விஜயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேஷ், அரியப்பன், திவாகர் காதர் பாஷா, சின்னபிள்ளப்பார் சீனிவாச ரெட்டி, திவாகர், ரகுநாத், ஒன்றிய இளைஞர் அணி மணிவண்ணன், தசரதன், மஞ்நாநாத், முனிராஜ், ரவி, நாகபூசண், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment