யாழ்ப்பாணத்தில் மீனின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கடல் கொந்தளிப்பால் அனேகமான மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடியை தவிர்த்திருந்தனர்.காற்றுடன் கூடிய மழை மற்றும் கடல் கொந்தளிப்பால் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் தீவுப்பகுதி, வடமராட்சி போன்ற பிரதேசங்களில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பை தவிர்த்துள்ளனர்.அதிகமானோர் கரைவலை மூலமே மீன்பிடியில் ஈடுபட்டனர்.
இதனால் கடலுணவின் வருகை குறைந்தும், விலை அதிகரித்தும் காணப்படுகிறது.வடமராட்சிப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண நகருக்கு எடுத்து வரப்பட்ட கடலுணவுகளின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டன.
அதிகமானோர் கரைவலை மூலமே மீன்பிடியில் ஈடுபட்டனர். இதனால் கடலுணவின் வருகை குறைந்தும், விலை அதிகரித்தும் காணப்படுகிறது.வடமராட்சிப் பிரதேசத்தில் இருந்து யாழ்ப்பாண நகருக்கு எடுத்து வரப்பட்ட கடலுணவுகளின் விலையும் அதிகரித்துக் காணப்பட்டன.அத்துடன் பாசையூர், குருநகர், கொட்டடி, நாவாந்துறை, கல்வியங்காடு மீன் சந்தைகளில் கடலுணவுகளில் விலையும் அதிகரித்துக் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.