கண்டி வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ் நகரில் ஆர்ப்பாட்டம்!!

331 0

கண்டியில் இடம்பெற்ற வன்முறைக்கு கண்டம் தெரிவித்து யாழில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பட்டில் நடத்தப்பட்டுள்ளது.கடந்த மாதம் 22ஆம் திகதி தெல்தெனிய பிரதேசத்தில் பாரவூர்தியில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரை, முச்சக்கரவண்டியில் வந்த சிலர் வழிமறித்து தாக்கியுள்ளனர்.

அதன்போது, தாக்குதலுக்கு உள்ளானவர் பலியானார். தாக்குதல் சம்பவத்தில் பலியானவரின் ஆதரவாளர்கள், தாக்குதலுடன் தொடர்புடைய ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீ மூட்டியுள்ளனர்.இதையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை தொடர்ந்த நிலையில், இதில் மற்றுமொரு வர்த்தக நிறுவனத்திற்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 24 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை விடுவிக்கக்கோரி மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண ரத்ன தேரர் தலைமையில் தெல்தெனிய பொலிஸ் நிலையத்திற்கு முன் ஆர்ப்பாட்டமொன்றும் முன்னெடுக்கப்பட்டது.எனினும், நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் மக்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், உடன் அமுலாகும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

Leave a comment