நிலாவெளி படகு அனர்த்தத்தில் உயிரிழந்த ஐவரின் இறுதிக்கிரியைகள்!

233 0

நிலாவெளி – பெரியகுளத்தில் படகு ஒன்று கவிழ்ந்து உயிரிழந்த ஐவரினதும் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றது.கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். மூன்று ஆண்களும், இரண்டு பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

தர்மலிங்கம் தங்கத்துறை (42வயது), டி.சங்கவி (10வயது), சுரேஷ் கேதிராஜ் (10வயது), சுரேஷ் யுதேஷன் (07வயது), சுதன் பிரனாவி (07வயது) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் இறுதி கிரியைகள் நேற்று மாலை இடம்பெற்றதுடன், உடலம் நிலாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இதில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு தங்களது அஞ்சலிகளைத் தெரிவித்ததுடன், அனைத்து உடலங்களும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment