உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான அளவு முட்டைகள் சந்தையில் காணப்படுவதால் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நிகால் வெடிசிங்க, கிராமிய பொருளாதார விவகார அமைச்சர் பி. ஹெரிசனுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான எவ்வித தேவையும் இல்லை என்பதால், அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அது தொடர்பில் இலங்கை துறைமுகம் மற்றும் சுங்கப் பிரிவிற்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்வரும் பண்டிகை காலத்திற்கு போதுமான அளவு முட்டைகள் இருப்பதால் எந்தவொரு இறக்குமதியாளர்களுக்கும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அமைச்சர் தனக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நிகால் வெடிசிங்க கூறினார்.