முச்சக்கர வண்டி சாரதிகள் பத்தாயிரம் பேருக்கு சுற்றுலாப் போக்குவரத்து பற்றிய பயிற்சியைப் பெற்றுக் கொடுக்க வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
நிதி அமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு சகல முச்சக்கரவண்டி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பயிற்சிக்கு சாரதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்..
இதேவேளை குறித்த பயிற்சிகள் மூன்று கட்டங்களாக வழங்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

