திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை நெல் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகள் நேற்றிரவு முதல் பெய்து வரும் அடைமழையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே மாவட்டத்தின் சில பகுதிகளில் விவசாயிகள் அறுவடையை நிறைவு செய்தும் இன்னுமொரு பகுதியினர் மழையை எதிர்பார்த்தும் காத்திருக்கின்றனர்.
எனவே கிடைத்த மழைவீழ்ச்சியானது ஒரு சில விவசாயிகளுக்கு சாதகமாகவும் மறுபுறம் அறுவடைக்கு காத்திருந்த விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
எனினும் மாவட்டதின் சில பகுதிகளில் மழையை நம்பி விவசாயம் செய்த விவசாயிகளின் வயல் நிலங்கள் வறட்சி காரணமாக கைவிடப்பட்டும் காணப்படுகின்றன.
இதேவேளை உரிய உத்தியோகத்தர்கள் இவை தொடர்பான தகவல்களை சேகரித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது