கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை முதல் நஷ்டஈடு வழங்க நடவடிக்கை- ரணில்

231 0

திகன, கென்கல்ல, பல்லேகல, அகுரன ஆகிய பிரதேசங்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நேரடியாக விஜயம் செய்து  நிலமையினை  பார்வையிட்டுள்ளார்.

அத்துடன், அப்பிரதேசங்களில் சேதமடைந்துள்ள பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்களையும் இதன்போது பிரதமர் பார்வையிட்டதுடன் பிரதேசவாசிகளுடனும் கலந்துரையாடியுள்ளார்.

மக்கள் சந்திப்பின் பின்னர்  கண்டி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட பாதுகாப்பு குழுக்கூட்டத்திலும் பிரதமர் கலந்துகொண்டுள்ளார். இதில் பிரதமர் கருத்துத் தெரிவிக்கையில்,

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனவாதத்தீயில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நஷ்ட ஈடுவழங்குமாறும் இந்நடவடிக்கையை நாளை முதலே ஆரம்பிக்குமாறும் பிரதமர் அதிகாரிகளைக் கேட்டுள்ளார்.

அத்துடன்,  அசம்பாவிதத்தில்  உயிரிழந்தவர்களுக்கு  ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a comment