சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள்

236 0

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, அடுத்த மாதம் 6ஆம் திகதியிலிருந்து விசேட பஸ் சேவைகள் ஆரம்பமாகவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

6ஆம் திகதி ஆரம்பமாகவும் விசேட பஸ் சேவைகளை 24 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர்.டீ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இந்த சேவைகளானது கொழும்பு நகரை மையப்படுத்தி ஆரம்பமாகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment