விபத்தில் வைத்தியர் பலி!!!

228 0

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் – மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அரவிந்தன் எனும் வைத்தியரே  உயிரிழந்துள்ளார். 

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment